பொங்கல் பண்டிகைக்காக அரசுப் போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்பட்ட 1 லட்சத்து 87 ஆயிரத்து 617 பேருந்துகள் மூலம் 12 கோடியே 81 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கடந்தாண்டை விட இந்தாண்டு 37 ஆயிரத்து 832 பேருந்து சேவைகள் கூடுதலாக இயக்கப்பட்டதில், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 237 கோடியே 47 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.