இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை பிவி.சிந்து, தொடரிலிருந்து வெளியேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, இந்தோனேசிய வீராங்கனை துன்ஜங்கை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய துன்ஜங் 21-9, 19-21, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.