Also Watch
Read this
Posted on: Dec 23, 2024 03:48 PM
By: Srini Vasan

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள எம்.பி.பி.எஸ் இடங்களை நிரப்புவதற்கு, இன்றும், நாளையும் சிறப்பு கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 5 சுற்று கலந்தாய்வுக்கு பின்னரும் நிரம்பாத மருத்துவ இடங்களை நிரப்புவதற்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தக் கோரிய மனு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் நாட்டில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதை கருத்தில் கொண்டு, நிரம்பாத எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த உத்தரவிட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved