Also Watch
Read this
By: Fyrose Banu

திருப்பூர் உடுமலை–மூணாறு சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் கடந்த சில வாரங்களாக வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி சாலையோரப் பகுதிகளுக்கு வருவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மூணாறு–உடுமலை சாலையில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தை ஆவேசமாக துரத்தியது. இதனை வாகனத்தில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved