Also Watch
Read this
By: Manigandan Raja

கோவை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் கோவை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, திருப்பூர் அணி அபார வெற்றி பெற்றது. நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 13-வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கோவை அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து களமிறங்கிய திருப்பூர் அணி 18 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் கோவை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, திருப்பூர் அணி அபார வெற்றி பெற்றது.
நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி
டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திண்டுக்கல்லில் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய திருச்சி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஜெயராமன் சுரேஷ்குமார் அரைசதம் விளாசினார்.

தொடர்ந்து களமிறங்கிய நெல்லை அணி, 18 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளில் விளையாடியுள்ள திருச்சி 2 வெற்றிகளை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved