Also Watch
Read this
By: Manigandan Raja

அமித்ஷாவின் கற்பனை கதைகளை கேட்க தயாராக இல்லை
நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கற்பனை கதைகளை கேட்க தாங்கள் தயாராக இல்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிக் குண்டு பயன்படுத்த உத்தரவிட்டது யார் என்பதை மட்டும் அவர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றார்.
எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க தயார்
மாணவர்கள் போராட்டம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க தயாராக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவாதிக்க முதலில் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் எதிர்க்கட்சிகள் முறைப்படி கடிதம் அளிக்க வேண்டும் என்றார்.
மேற்குவங்கத்தின் பெயரை "பச்சிம் பங்கா" என மாற்ற வேண்டும்
மேற்குவங்க மாநிலத்தின் பெயரை "பச்சிம் பங்கா" என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என பா.ஜ.க. எம்பி சமிக் பட்டாச்சார்யா கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், மேற்கு வங்கத்தின் முந்தைய திரிணாமுல் காங்கிரஸ் அரசை குறிப்பிட்டு சூசகமாக பேசிய அவர், சட்டமன்றத்தில் தங்கள் கட்சிக்கு பெரும்பான்மை இருந்ததால், மாநிலத்திற்கு வங்காளம் என பெயர் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved