Also Watch
Read this
By: Manigandan Raja

சிறையில் செல்போன் பயன்படுத்தியதாக போலீஸார் வழக்கு
பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் மீது செல்போன் பயன்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில்மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், பிரஜ்வல் அறையில் செல்போன், சார்ஜர், பென் டிரைவ் உள்ளிட்டவை சிக்கியது.
வீட்டில் எரிந்த நிலையில் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்
டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த இவரது வீட்டில் கடந்தாண்டு மார்ச் 14-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டபோது மூட்டை மூட்டையாக எரிந்த நிலையில் ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
மும்பையை சேர்ந்த பிரபல பெண் பைக்கர் விபத்தில் பலி
மும்பையை சேர்ந்த பிரபல பெண் பைக்கர் சத்தீஸ்கர் மாநிலத்தில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தார். மும்பை போரிவிலியை சேர்ந்த பிரபல பெண் பைக்கரான 24 வயது ரித்தி தாக்கர், சுமார் 20-க்கும் மேற்பட்ட பெண் பைக்கர்களுடன் சேர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் பகுதிக்கு பைக்கில் சுற்றுப்பயணம் சென்றபோது, அடையாளம் தெரியாத டிரெய்லர் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved