Also Watch
Read this
By: Manigandan Raja

ரூ.1,934 கோடியில் அமெரிக்காவிடம் இருந்து வாங்க ஒப்பந்தம்
இந்தியாவின் கடல் எல்லைகளை பாதுகாக்க அமெரிக்காவிடம் இருந்து 2 அதிநவீன MQ-9B டிரோன்களை குத்தகைக்கு வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆயிரத்து 934 கோடி ரூபாய் மதிப்பில் 30 மாதங்களுக்கு குத்தகைக்கு எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முன்னதாக இதே வகையிலான 2 டிரோன்களை மத்திய அரசு குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தலைமை தொழில்நுட்ப மற்றும் நிதி அதிகாரி விரைவில் நியமனம்
UGC-NET தேர்வுத் தாள்களில் பிழைகள் தொடர்பாக தேசிய தேர்வு முகமையில் இருந்து 50 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், காலிப்பணியிடங்கலுக்கு புதிய அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.தலைமை தொழில்நுட்ப அதிகாரி, தலைமை நிதி அதிகாரி பதவிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.

ராஞ்சியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
தொடர் போராட்டத்துக்கு ஜார்க்கண்ட் அரசு செவி சாய்த்துள்ள நிலையில், கடந்த 24 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் ராஞ்சியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை எடுத்ததற்காக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக மாணவர் அமைப்பினர் தெரிவித்தனர்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved