Also Watch
Read this
By: Fyrose Banu

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்த்துறையினரின் 3 இசக்கர வாகனங்கள் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்துள்ளது. இரவு நேர பணியில் இருந்த போலீசார் அதிகாலை 4 மணிக்கு வெளியில் வந்து பார்த்துள்ளனர். அப்போது காவல்நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் குறிப்பிட்ட 3 வாகனங்கள் மட்டும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்துள்ளது. 
அதனை தொடர்ந்து எரிந்து கொண்டிருந்த தீயை காவல்த்துறையினர் அனைத்து விட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக பீடி சிகரட் பிடிப்பவர் எவரேனும் தீக்குசியை போட்டு சென்றனரா, அல்லது பாதிக்கப்பட்ட மர்ம நபர்கள் வேண்டுமென்றே தீ வைத்துள்ளனரா என்ற பல்வேறு கோணத்தில் காவல்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்துள்ள சம்வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved