Also Watch
Read this
By: Manigandan Raja

போரில் வெற்றியடைந்து விட்டோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை இன்னும் முடிவுக்கு வரவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்த போரில் தாங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்து விட்டதாகவும், ஈரான் கடும் பணவீக்கத்தை சந்தித்து வருவதாகவும் கூறினார்.
மேலும், ஈரானின் பொருளாதாரம் நிலைகுலைந்து போய்விட்டதாகவும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமக்கு எந்த அவசரமும் இல்லை எனவும், அவர்கள் எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை எனவும் தெரிவித்தார்.
17 நாடுகளின் மீட்புக் குழுக்களுக்கு நேபாளம் அனுமதி மறுப்பு
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு உதவ முன்வந்த இந்தியா, சீனா உள்ளிட்ட 17 நாடுகளின் தேடல் மற்றும் மீட்புக் குழுக்களை அனுமதிக்க அந்நாட்டு அரசு மறுத்து விட்டது. அதேசமயம், நிவாரண பொருட்கள் மற்றும் நிதி உதவிகளை பெற நேபாளம் சம்மதித்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை நரகத்திற்கு அனுப்புவோம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நரகத்திற்கு அனுப்புவோம் என ஈரான் நாட்டின் உச்ச தேசிய பாதுகாப்பு பேரவையின் செயலாளர் மொஹ்சின் ரெசாய் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்காவின் பொருளாதார தடைகள் மற்றும் அழுத்தங்கள் தொடர்ந்தால், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved