Also Watch
Read this
By: Manigandan Raja

படம் பிரமிப்பை ஏற்படுத்துவதாக நடிகர் சரத்குமார் பாராட்டு
நடிகர் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள "மண்டாடி" திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தகுதியானது என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்திய திரையுலகில் இதுவரை முயற்சிக்கப்படாத ஒரு துணிச்சலான படைப்பு எனவும், முழுவதுமாக கடலிலேயே ஷூட்டிங் நடத்தப்பட்ட இந்த படம், பிரமிக்க வைக்கும் காட்சிகளை கொண்டுள்ளதாகவும், சூரி கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் "ரணபலி" திரைப்படம்
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘ரணபலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பை நடிகை ராஷ்மிகா நிறைவுசெய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தில் அர்னால்ட் வோஸ்லூ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அஜய் - அதுல் ஆகியோர் இசையமைக்கின்றனர். 1870-களில் நடைபெற்ற பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் பெரும் பஞ்சத்தின் பின்னணியில் இந்த படத்தின் கதை உருவாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved