Also Watch
Read this
By: Manigandan Raja

பகுதி முழுவதும் ஒற்றுமையை ஏற்படுத்த ஓமன் அரசு அறிவிப்பு
ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே ஹோர்முஸ் நீரிணை விவகாரம் தொடர்பாக நடைபெறவிருந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பகுதி முழுவதும் ஒற்றுமையை எட்ட வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நிலவும் சூழலை கையாள்வதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஓமன் அரசு அறிவித்துள்ளது.
உக்ரைன் ரயில் மீது ரஷ்யா தாக்குதல்
போலந்து எல்லைக்கு அருகில் உக்ரைனில் இயக்கப்பட்ட பயணிகள் ரயில் மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில், ரயிலின் என்ஜின் பகுதி சேதமடைந்தது.

கீவ் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு போலந்து வழியாக திரும்பிய முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பல சர்வதேச தலைவர்கள் பயணித்த ரயில், இதே பாதையில் சில நிமிடங்களுக்கு முன்பு கடந்து சென்றிருந்தது. அவர்கள், கடந்த சிறிது நேரத்திற்கு பின்பு அதே தண்டவாளத்தில் வந்த மற்றொரு பயணிகள் ரயில் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved