Also Watch
Read this
By: Manigandan Raja

ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் வேட்டை நடத்திய வீரர்கள்
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள ஐல் ராயல் தேசிய பூங்காவிற்கு தனியாக சென்ற 70 வயது முதியவர், 7 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 5-ம் தேதி மலையேற்ற பயிற்சியை முடித்து அவர் திரும்பாததால், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மூலம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் அடர்ந்த தீவுப் பகுதியில் இருந்த முதியவரை சக மலையேற்ற வீரர்கள் கண்டுபிடித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கடலோரக் காவல் படையினர், கடுங்குளிரால் பாதிக்கப்பட்டிருந்த முதியவரை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கவிழ்ந்த படகின் மேல் 2 நாட்களாக தத்தளித்த சிறுவன்
அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் உள்ள பெரிங் கடலில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், கவிழ்ந்த படகின் மேல் பகுதியை பிடித்துக்கொண்டு 2 நாட்களாக உயிருக்கு போராடி வந்த 15 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். அவர்களுடன் பயணித்த 2 பேர் உயிரிழந்த நிலையில், சிறுவன் மட்டும் உயிர் தப்பியுள்ளான்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved