Also Watch
Read this
By: Manigandan Raja

மீனவராக நடித்தது தனக்கு கிடைத்த பாக்கியம்
மீனவர்களின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாகக் கொண்ட மண்டாடி திரைப்படம், ராமநாதபுரம் பகுதியில் நடைபெறும் பாய்மர படகு போட்டியை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் என நடிகர் சூரி கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மீனவராக நடித்தது தனக்கு கிடைத்த பாக்கியம் என்றும், பொழுதுபோக்குடன் சமூகத்திற்குத் தேவையான படமாகவும் ‘மண்டாடி’ இருக்கும் என அவர் தெரிவித்தார்.
மணிரத்னம் - ஏ.ஆர். ரகுமான் இணையும் புதிய திரைப்படம்
இயக்குநர் மணிரத்னம் - இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் தலைப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர்.

அழுத்தமான காதல் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் ஓ.டி.டி. உரிமையை, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 40 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved