Also Watch
Read this
By: Fyrose Banu

கர்நாடக மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் தற்போது பெய்து வரும் பருவ மழையால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கே ஆர் எஸ் ஆணைகள் மிக வேகமாக நிரம்பி வருகிறது. இந்த நிலையில் கபிணி அணை மொத்தம் உயரம் 65 அடிக்கு 63.59 அடியை நீர் இருப்பு உள்ளது. இதனால் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 12,000 கனஅடி நீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதே போல் மாண்டிய மாவட்டம் கே ஆர் எஸ் அணையில் 124.8 அடிக்கு 109.53 அடி நீர் இருப்பு உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு தமிழகத்திற்கு காவேரி ஆற்றில் 3000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் தற்போது தமிழகத்திற்கு காவேரி ஆற்றில் வினாடிக்கு 15000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved