Also Watch
Read this
By: Fyrose Banu

பண்ருட்டியில் நள்ளிரவு நேரத்தில் மர்மமான முறையில் 6 பலாப்பழம் குடோன் தீப்பிடித்து எறிந்து பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நள்ளிரவு நேரத்தில் ஒரு பலாப்பழம் குடோனில் மர்மமான முறையில் தீப்பிடித்து அடுத்தடுத்த 6 குடோனில் மளமளவென தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

அவ்வழியாக சென்றவர்கள் பண்ருட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வாகனம் வருவதற்குள் 6 பலாப்பழம் குடோன் எரிந்து பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சாம்பலானது.

இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பண்ருட்டி பகுதிக்கு பலாப்பழம் குடோன் அமைக்க கோரி தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பலா விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved