Also Watch
Read this
By: Web Team

கோவையில் எதிர்பாராத விதமாக பழுதாகி நின்ற அரசு பேருந்தின் கண்ணாடிகளை ஆத்திரத்தில் பயணிகள் உடைத்தனர்.
பொள்ளாச்சியில் இருந்து கோவை சென்ற அரசு பேருந்து ஒத்தகால் மண்டபம் அருகே வந்த போது ரேடியேட்டர் பழுதாகி பேருந்தின் இயந்திரத்தில் புகை கிளம்பியதால் பயணிகள் அவசர அவசரமாக கீழே இறங்கினர்.
குறித்த நேரத்தில் வேலைக்குச் செல்ல முடியாத ஆத்திரத்தில் சில பயணிகள் பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved