சென்னை தாம்பரம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இரவு நேரத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. மீனம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் பெருங்களத்தூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், சேலையூர் சாலையில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனர் ஒன்று கிழிந்து தொங்கியதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.