Also Watch
Read this
By: Web Team

முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சென்னை திருவொற்றியூர் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த போது, பாஜகவினருக்கும் விசிகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பாஜக கொடிகளை சிலை அருகில் எடுத்துச் செல்ல கூடாது என எதிர்ப்பு தெரிவித்த விசிகவினர், மதவாத சக்திகள் குறித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சமரச பேச்சுவார்த்தைக்கு பின்னர், பாஜக கொடிகள் இன்றி தமிழிசை சௌந்தர்ராஜன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved