Also Watch
Read this
By: Web Team
முருகனின் 3ஆம் படை வீடான பழனி திருஆவினன்குடி கோயில் குடமுழுக்கு விழா, கோலாகலமாக நடைபெற்றது. அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் கடந்த 4 ஆம்தேதி யாகசாலை தொடங்கி பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு, யாக சாலையில் வைக்கப்பட்ட புனித நீர் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு, குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved