Also Watch
Read this
Posted on: Sep 01, 2024 11:43 AM
By: Srini Vasan

ஊருக்குள் புகுந்த முதலையை பிடித்துக்கொண்டு டூ வீலரில் triples சென்ற மீட்புக்குழுவினரின் வீடியோவை பார்த்து இது என்னடா முதலைக்கு வந்த சோதனை என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். குஜராத்தில் சமீபத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விஸ்வாமித்ரி நதி இருந்து ஏராளமான முதலைகள் அகமதாபாத் மற்றும் வதோதரா நகரங்களுக்குள் புகுந்ததால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். அவ்வாறு இதுவரை 40க்கும் மேற்பட்ட முதலைகளை மீட்புக்குழுவினர் பிடித்துள்ள நிலையில், அவற்றை டூ வீலரில் எடுத்துச்சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved