Also Watch
Read this
By: Manigandan Raja

கோஸ்டல் ரோட் பாலத்தில் அதிவேகமாக சென்ற BMW கார்
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் கோஸ்டல் ரோட் ((Coastal Road)) பாலத்தில் அதிவேகமாகச் சென்ற BMW கார் கட்டுபாட்டை இழந்து பாலத்தை தாண்டி கீழே பாய்ந்ததன் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. மரைன் டிரைவ் பகுதியிலிருந்து ஹாஜி அலி நோக்கி சென்ற அந்த காரிலிருந்த மூன்று பேர் விபத்தில் உயிரிழந்த நிலையில், ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
5,053 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல்
தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைதான சியா கோயல் போலி இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கியது தெரிய வந்துள்ளது. புனே லோககாட் ((Lohagad)) கோட்டையில் நடந்த இந்த கொலை வழக்கை விசாரித்து வரும் காவல்துறையினர் சதித்திட்டத்தை விவரிக்கும் 5 ஆயிரத்து 53 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சனிக்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அதில் மாஹி ((Mahi)) என்ற பெயரில் போலி இன்ஸ்டா கணக்கை உருவாக்கி, கேதனுக்கு அதிலிருந்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு பின்னர் அந்த கணக்கு நீக்கப்பட்டது தெரியவந்ததுள்ளது.
ஐ.ஐ.டி. மாணவர் சாஹில் தற்கொலை - பேராசிரியர் மீது வழக்கு
மும்பை ஐ.ஐ.டி. மாணவர் தற்கொலை விவகாரத்தில் பேராசிரியர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வில் ChatGPT பயன்படுத்தி காப்பி அடித்ததாக பிடிபட்ட மாணவர் சாஹில் வக்கோடே, பிடிபட்ட சிறிது நேரத்திலேயே விடுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக பேராசிரியர் ஒருவர் தனது மகனை சாதி ரீதியாக திட்டி அவமானப்படுத்தியதாக அவரது தந்தை காவல்நிலையத்தில் அளித்த புகாரில் பேராசிரியர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved