Also Watch
Read this
By: Manigandan Raja

காலால் பந்தை உதைத்து உற்சாகத்துடன் விளையாடிய யானை
அசாம் மாநிலம் கோலாகாட் (( Golaghat )) மாவட்டம் போகிதாலா ((Bogidhala )) பகுதியில், காட்டுயானை ஒன்று கால்பந்து விளையாடிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. போகிதாலா பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது காட்டு யானை ஒன்று திடீரென நுழைந்ததால் அவர்கள் பயந்து ஓடினர்.
அப்போது அவர்கள் விட்டுச் சென்ற கால்பந்தைக் கண்ட அந்த யானை, பந்தை உதைத்து விளையாடியது.
அகிலேஷ் மாணவர் அமைப்பிற்கு புதிய சீருடை அறிமுகம்
உத்தரப்பிரதேசத்தில் வரும் 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ், தனது கட்சியின் மாணவர் அமைப்பினருக்கு Blue T-Shirt மற்றும் ஜீன்ஸை அதிகாரப்பூர்வ சீருடையாக அறிமுகம் செய்துள்ளார்.

தங்களின் பாரம்பரியமான யாதவ், சிறுபான்மையினர் வாக்குகளை தாண்டி, பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் வாக்குகளையும் முழுமையாக ஈர்ப்பதே அகிலேஷின் இந்த புதிய அரசியல் வியூகம் என கூறப்படுகிறது.
மும்பை, தானேவுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்த IMD
மும்பை மற்றும் தானே ஆகிய பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று "மஞ்சள் எச்சரிக்கை" விடுத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் ஏற்கனவே நகரின் பல இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ள நிலையில், மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

மோசமான வானிலை நிலவ வாய்ப்புள்ளதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved