Also Watch
Read this
By: Web Team

பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை கடத்தும் மிகப்பெரிய உளவாளி கும்பலை குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த கும்பலின் முக்கிய சூத்திரதாரி என கூறப்படும் ராணுவ சுபேதார் ஏகே சிங்ர மற்றும் ராஷ்மாணி பால் ஆகியோரை அவர்கள் இன்று கைது செய்தனர். சுபேதார் ஏகே சிங் கோவாவில் வைத்தும் ராஷ்மாணி பால் டாமனில் வைத்தும் கைது செய்யப்பட்டனர். இந்த இருவருக்கும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளிகளுடன் நேரடி தொடர்பு உள்ளதாகவும், இந்திய ராணுவத்தின் ரகசியங்களை இவர்கள் அவர்களுக்கு கைமாற்றியதாகவும் தீவிரவாத தடுப்புப் படையினர் தெரிவித்தனர். மற்றோர் சம்பவத்தில், அரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தை சேர்ந்த ரிஸ்வான் என்ற வழக்கறிஞர், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு உளவு பார்த்த துடன் தீவிரவாதிகளுக்கு நிதி சேகரித்த தாகவும் மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved