Also Watch
Read this
By: Web Team

ரஷ்ய ராணுவத்தில் துணை ஊழியர்களாக இந்திய நாட்டினரை ஆட்சேர்ப்பு செய்யும் நடைமுறையை ரஷ்யா நிறுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கூறிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், எந்த சூழ்நிலையிலும் ரஷ்ய ராணுவத்தில் சேரும் வாய்ப்பை இந்திய இளைஞர்கள் ஏற்கக்கூடாது என்றும், இது ஆபத்து நிறைந்தது என்றும் எச்சரித்தார்.
ரஷ்ய ராணுவத்தில் தற்போது சமையல்காரர்கள் மற்றும் உதவியாளர்கள் போன்ற துணை பணியாளர்களாகப் பணியாற்றும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க கோரி அந்நாட்டு அதிகாரிகளிடமும் எடுத்து கூறி இருப்பதாகவும் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved