Also Watch
Read this
By: Manigandan Raja

குடியரசு தலைவரின் உரையை பாராட்டிய பிரதமர் மோடி
சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரையை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். நாட்டின் வளர்ச்சி, பெண்களின் முன்னேற்றம், பொதுத் தேர்வுகளைச் சீரமைக்கும் நடவடிக்கை, ஆபரேஷன் சிந்தூர், நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து குடியரசுத் தலைவர் முர்மு ஆற்றிய உரை ஆழமான சிந்தனைகளை உள்ளடக்கி இருப்பதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
அவரது கருத்துகள் நம் நாட்டின் வலிமையையும், ஒவ்வொரு இந்தியரின் கனவுகளையும் வெளிக்காட்டுவதாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து
நாட்டின் 80 ஆவது சுதந்திர நாளையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு காணொலி வாயிலாக வாழ்த்து தெரிவித்து உரையாற்றியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், பொதுத் தேர்வுகளில் முறையற்ற நடைமுறைகளை முற்றிலுமாகத் தடுத்து, தேர்வுகளை இளைஞர்களுக்கு மிகவும் வெளிப்படையானதாகவும், பாதுகாப்பானதாகவும், நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் மாற்றுவதே இந்தச் சீர்த்திருத்தங்களின் நோக்கம் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved