Also Watch
Read this
By: Manigandan Raja

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின் தாக்கம்
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின் தாக்கத்தால், பீகார் மாநிலம் பாட்னாவில் கங்கை நதியின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்கின்றனர்.
வீடுகள் மற்றும் குடிசைகள் ஏற்கனவே முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதால், மக்கள் தங்களது வீட்டுப் பொருட்கள் மற்றும் உடைமைகளை பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக மாற்றி வருகின்றனர்.
இரண்டாவது கட்டமாக உதவிகளை அனுப்பிய இந்தியா
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தைத் தொடர்ந்து, இந்தியா இரண்டாவது கட்டமாக 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது. ராணுவ விமானம் மூலம் அனுப்பப்பட்ட இந்த உதவியில், மருத்துவப் பொருட்கள், உணவுப் பொட்டலங்கள் மற்றும் அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. முன்னதாக 10 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன.

நேபாளம், சீனாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு 1,500 பேர் காணவில்லை
நேபாளம் மற்றும் சீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ஆயிரத்து 500 பேர் காணவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. காணாமல் போனவர்களில் 700 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் நிலை என்ன? என்பது குறித்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved