Also Watch
Read this
Posted on: Nov 03, 2025 06:48 AM
By: Web Team

ஆப்கானிஸ்தானில், இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக கொண்டு 28 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. அதிகாலை உறங்கிக் கொண்டிருந்த பலரும், வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
நிலநடுக்கம் தொடர்பான பாதிப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை. இதனிடையே நிலநடுக்கத்தின் போது கட்டங்கள் குலுங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved