Also Watch
Read this
சட்டப்பேரவையில் சமூகநீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய மூன்று துறைகளின் அமைச்சர்களும் இன்று பதிலுரை வழங்குகின்றனர். நேரத்தை கருத்தில் கொண்டு இன்று கேள்வி நேரம் இருக்காது என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்து உள்ளார்.

விலை உயர்வு - கவன ஈர்ப்பு
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக பேரவையில் கவன ஈர்ப்பை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்தார்.

கலைஞர் ஆட்சியில்...
தமிழ்நாட்டில் துவரம் பருப்பு, அரிசி, சர்க்கரை , எண்ணெய் விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படுவதாவும், கலைஞர் ஆட்சிக்காலத்தில் விலைவாசி உயர்ந்தபோது பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவற்றை குறைவான விலைக்கு ரேஷனில் வழங்கினார் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

அமைச்சர் விளக்கம்
ஈரான் போர், எரிபொருள் விலை உயர்வால்தான் அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்துள்ளன; வெங்காயம் உள்ளிட்ட 41 பொருட்களுக்கான விலையை தினமும் கவனித்து வருகிறோம், விலை அதிகமாக உள்ள பொருட்களை அரசு விற்பனை செய்யவும், கடந்த ஆட்சிகளில் நடந்தது போல் ரேஷன் கடை மூலம் மட்டுமல்ல பசுமை அங்காடி மூலமும் பொருட்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் வெங்கட்ரமணன் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved