Also Watch
Read this
Posted on: Jan 09, 2026 08:37 AM
By: Manigandan Raja
திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, காரைக்காலில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு என எச்சரிக்கை விடுத்துள்ளது. மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக் கூடும் எனவும் தகவல். வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தம் காரணமாக தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் கடும் சீற்றம் ஏற்பட்டுள்ளது. காவிரிப்படுகை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இதையும் பாருங்கள் - அதிமுகவினரிடம் எடப்பாடி பழனிசாமி நேர்காணல்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved