Also Watch
Read this
By: Manigandan Raja

இந்தியா மண்ணில் தொடரை நடத்தும் ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்-இந்திய அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் செப்டம்பரில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம்((BCCI))அறிவித்துள்ளது.
முதல் போட்டி செப்டம்பர் 13ஆம் தேதியும், 2 மற்றும் மூன்றாவது போட்டிகள் முறையே 15, 17 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறுகின்றன. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக அந்த அணி இந்தியாவில் கிரிக்கெட் தொடரை நடத்துகிறது.
கனடா ஓபன் டென்னிஸ் போட்டியில் அபார ஆட்டம்
கனடா ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன், ஸ்பெயினின் ரபேல் ஜோடார் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் பென் ஷெல்டன், செக் குடியரசின் ஜேகுப் மென்சிக்கை வென்றார். மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் ரபேல் ஜோடார், பிரான்சின் ஆர்தர் பில்ஸை வென்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved