Also Watch
Read this
By: Manigandan Raja

3.49 லட்சம் உரிமையாளர்களுக்கு திடீரென நோட்டீஸ்
சென்னையில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்த நிலையில், தற்போது 3 புள்ளி 49 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்கு திடீரென வரி மறுமதிப்பீடு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ட்ரோன், செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் ஜி.எஸ்.டி தகவல்களை ஒப்பிட்டு, குறைவாக வரி மதிப்பிடப்பட்ட சொத்துகள் கண்டறியப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பு பகுதிகளில் வணிக செயல்பாடுகள் நடப்பதே இதற்கு முக்கிய காரணம் என மாநகராட்சி விளக்கியுள்ளது. மறுமதிப்பீடு செய்யப்பட்ட சொத்துகளில் 55 சதவீத கட்டிடங்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே வரி உயர்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved