Also Watch
Read this
By: Manigandan Raja

2 பெலுகா திமிங்கலங்கள் மற்றும் 4 டால்பின்கள் இடமாற்றம்
கனடாவில் ஓராண்டுக்கு முன்பு மூடப்பட்ட Marineland கடல்சார் பூங்காவில் இருந்து, 2 பெலுகா திமிங்கலங்கள் மற்றும் 4 டால்பின்கள் கிழக்கு ஸ்பெயினில் உள்ள ஒரு நீர்வாழ் உயிரின காட்சியகத்திற்கு ((aquarium)) இடமாற்றம் செய்யப்பட்டன.
நீர்வாழ் விலங்குகளைப் பாதுகாக்கும் சர்வதேச முயற்சியின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, Marineland பூங்காவில் இருந்து மேற்கொள்ளப்படும் ஐந்தாவது பெரிய இடமாற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏவுகணை மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல்
உக்ரைனின் கீவ் உள்ளிட்ட பல நகரங்கள் மீது ரஷ்யா இரவு முழுவதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன், 14 பேர் காயமடைந்தனர். இதற்கிடையே, ரஷ்ய ஏவுகணைகளை எதிர்கொள்ள உதவும் அமெரிக்காவின் Patriot வான் பாதுகாப்பு ஏவுகணைகளுக்கு உக்ரைனில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கூடுதல் வான் பாதுகாப்பு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வழங்க வேண்டும் என அதிபர் ஜெலென்ஸ்கி மேற்கத்திய நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved