Also Watch
Read this
By: Manigandan Raja

வெள்ளத்துடன் கூடிய மண்சரிவு - போக்குவரத்து துண்டிப்பு
உத்தரகாண்ட் மாநிலம் ஷாமோலி ((Chamoli)) மாவட்டத்தில் இந்திய-சீன எல்லைப் பகுதி அருகே ஆக்ரோஷமாக பாய்ந்த காட்டாற்று வெள்ளம் காரணமாக இரும்பு பாலம் அடித்து செல்லப்பட்டது. வெள்ளத்துடன் மண்சரிவும் ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்ட்ட நிலையில், மீட்புக் குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பூரியில் வெளுத்து வாங்கிய கனமழை
ஒடீசா மாநிலம் கடற்கரை நகரமான பூரியில் கனமழை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் ஆங்காங்கே நீர் தேங்கியது.

வாகங்களும் பழுதாகி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். முக்கிய சாலைகல் மட்டுமல்லாது குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வேன் - 9 பேர் பலி
மத்திய பிரதேச மாநிலத்தில் 11 பேருடன் சென்ற ஆம்னி வேன் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட விபத்தில் குழந்தை உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கனமழை காரணமாக ராஜ்கர் பகுதியில் உள்ள முக்கிய ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆம்னி வேன் எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் சிக்கியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved