Also Watch
Read this
By: Manigandan Raja

குசல் மெண்டிஸ்,பதும் நிஸங்கா முதல் டெஸ்டில் இருந்து விலகல்
இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை எதிர்கொள்ள தயாராகி வரும் இலங்கை அணியின் முக்கிய பேட்டர்களான குசல் மெண்டிஸ் மற்றும் பதும் நிஸங்கா காயம் காரணமாக முதல் டெஸ்டில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த இரு வீரர்களும் இல்லாதது இலங்கையின் பேட்டிங் ஆர்டருக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி கிரிக்கெட் அணியின் வீரர் அபிஷேக் போரல் கைது
மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர் அபிஷேக் போரலை போலீசார் கைது செய்தனர். கிரிக்கெட் வீரர் அபிஷேக் போரல் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி வன்கொடுமை செய்ததாக பெங்களூருவை சேர்ந்த மருத்துவ மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இவ்வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், அபிஷேக் போரலையும், அவரது நண்பரையும் கைது செய்ய உத்தரவிட்டது.
2 போட்டிகளில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்
2027-ம் ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு 10-வது அணியாக ஆப்கானிஸ்தான் தகுதி பெற்றது. அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தரவரிசையில் 8-ஆவது இடத்தை பிடித்த ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved