Also Watch
Read this
By: Manigandan Raja

நாடாளுமன்றத்தில் திமுக மீண்டும் நோட்டீஸ்
காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக மீண்டும் நோட்டீஸ் வழங்கியுள்ளது. காவிரி நீரை உரிய நேரத்தில் திறக்காததால் டெல்டா விவசாயிகள் சந்தித்துவரும் முக்கிய பிரச்னைகள் குறித்து அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என மக்களவையில் டி.ஆர்.பாலு மற்றும் மாநிலங்களவையில் திருச்சி சிவா ஆகியோர் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
காவிரி நீர் திறப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு மனு
காவிரி நீர் திறப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீர் பற்றாக்குறை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்துள்ளது.
தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் நீர் திறக்க உத்தரவு
தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 1 டி.எம்.சி வீதம் நீர் திறக்க வேண்டுமென கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved