Also Watch
Read this
By: Manigandan Raja

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு II (தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகள்)க்கான அறிக்கை, தேர்வாணையத்தின் ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இன்று (11.08.2026) வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, தேர்வர்கள் 11.8.2026 முதல் 09.09.2026 பி.ப. வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம்.
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - II (தொகுதி II மற்றும் IIA பணிகள்) க்கான முதல் நிலைத் தேர்வு 01.112026 அன்று நடைபெறும்தொழிலாளர் நலத்துறையில் உதவி ஆய்வாளர், தமிழ்நாடு வணிகவரித்துறையில் துணை வணிகவரி அதிகாரி, வேலைவாய்ப்புத் துறையில் ஜூனியர் அசிஸ்டன்ட் ஆபிஸர், சார் பதிவாளர் தொகுதி-2, ஜெயிலர் உள்ளிட்ட 14 பதவிகளில் காலியாக உள்ள 41 பணியிடங்களுக்கான குரூப் 2 அறிவிக்கப்பட்டுள்ளது.

பால்வளத் துறையில் மூத்த ஆய்வாளர், கூட்டுறவுத் துறையில் மூத்த ஆய்வாளர், அமைச்சக பணியில் ஆடிட் இன்ஸ்பெக்டர், கைத்தறி துறையில் கைத்தறி ஆய்வாளர், அமைச்சகப்பணி உதவியாளர் இந்து சமய அறநிலையத்துறை எக்ஸிக்யூட்டிவ் ஆபிஸர் தமிழ்நாடு மீன்வளத் துறையில் ஜூனியர் அசிஸ்டன்ட், தலைமைச் செயலகத்தில் உதவியாளர் சட்டப்பேரவையில் கிளார்க் உள்ளிட்ட 44 பதவிகளில் காலியாக உள்ள 780 பணியிடங்களுக்கான குரூப் 2a அறிவிக்கப்பட்டுள்ளது
கடந்த ஆண்டு 828 பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 821 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved