Also Watch
Read this
By: Manigandan Raja

நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் மங்களம் யானை நெற்றியில் தேசியக்கொடி வண்ணத்தில் மலர் மாலைகளால் அலங்கரித்து, இருபுற காதுகளில் மற்றும் நெற்றியிலும் தேசிய கொடியை வரைந்தும் அழகாக காட்சியளித்த மங்கலம் யானைக்கு, திருக்கோயில் கொடிமரம் அருகே தீபாரதனை செய்யப்பட்டது.

யானையின் மீது தேசியக்கொடி இருபுறமும் போர்த்தப்பட்டு கோயில் அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள கொடிமரம் அருகே வந்து, திருக்கோயில் செயல் அலுவலர் முருகன் மற்றும் யானை பாகன் அசோக் ஆகியோர் முன்னிலையில் தும்பிக்கையை நெற்றிக்கு மேல் உயர்த்தி தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தியது.
இதனைக் கண்டு கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஏராளமான பக்தர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். மங்களம் யானையுடன் இணைந்து செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved