Also Watch
Read this
By: Manigandan Raja

நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு,மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலியில் அரசுப் பள்ளிகளை சீரமைப்போம் என்ற புதிய இயக்கத்தை கரப்பான் பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் தீப்கே தொடங்கினார். அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் நாடு முழுவதும் இந்த இயக்கத்தை விரிவுப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
உயிர்பலி வாங்கிய மண் சரிவு - 4 பேர் பலி
அருணாச்சல பிரதேசத்தில் தொடரும் மழையால் சபன்சிரி((Subansiri )) மாவட்டத்தில் மண் சரிவில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர்.

திபங் பள்ளத்தாக்கு ((Dibang Valley )) பகுதியில் ராணுவ முகாமை வெள்ள நீர் அடித்து சென்ற நிலையில், அதில் சிக்கி மாயமான ராணுவ வீரர்கள் 5 பேரை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
டெலிவரி ஊழியரை தாக்கிய அடுக்குமாடி குடியிருப்புவாசி
உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டில் 5 நிமிடம் தாமதமாக வந்ததற்காக டெலிவரி ஊழியரை அடுக்குமாடி குடியிருப்புவாசி தாக்கிய பகீர் காட்சி வெளியாகியுள்ளது.

பிளிங்கிட்டில் பொருட்களை ஆர்டர் செய்திருந்த குடியிருப்பாளர் ஒருவர், வெறும் ஐந்தே நிமிடம் தாமதமாக வந்ததற்காக டெலிவரி ஊழியர் Amit-ன் கன்னத்தில் அறைந்தும், வீட்டுக்குள் இழுத்து சென்றும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved