Also Watch
Read this
By: Manigandan Raja

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகே சிறுகுடியில் கருங்குட்டு கருப்பசாமி, அய்யனார், கன்னிமார் கோவில் உள்ளது இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் வளர்பிறையில் கிடாக்கறி விருந்து நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இன்று 30-க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய்கள் வெட்டப்பட்டு 100க்கும் மேற்பட்ட முடைகள் அரிசி சாதம் சமைக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் சுற்றுவட்டத்தில் உள்ள சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கருப்புசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பின் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் காரணக்காரர்கள், கோயில் பூசாரிகள், கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved