Also Watch
Read this
By: Manigandan Raja

சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு வர முடியாத குழந்தைகள்
கேரளத்தில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு வராத குழந்தைகளை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்த பள்ளி சேர்மன், தனது வார்த்தைக்காக மன்னிப்பு கோரியிருக்கிறார்.
திரிசூரில் உள்ள ராஜு டேவிஸ் சர்வதேச பள்ளியின் சேர்மன் ராஜூ டேவிஸ், பள்ளி ஆசிரியர்களின் வாட்ஸ் அப் குழுவில், சுதந்திர தின கொண்டாட்ட ஏற்பாடுகள் குறித்து அனுப்பிய வாய்ஸ் நோட்டில், மாணவர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றும், வராத குழந்தைகளை பாகிஸ்தானுக்கு அனுப்பிவிடுங்கள் என எச்சரித்துள்ளார்.
இந்த ஆடியோ லீக் ஆகி பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved