Also Watch
Read this
By: Manigandan Raja

இருவரும் தலையோடு தலை முட்டிக் கொண்ட வீடியோ
கொழும்பு டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ((Yashasvi Jaiswal ))மற்றும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ ((Asitha Fernando))இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு, இருவரும் தலையால் முட்டிக் கொண்டனர்.
பந்து வீச்சால் ஜெய்ஸ்வாலை க்ளீன் போல்ட் செய்த மகிழ்ச்சியில் பெர்னாண்டோ ஆக்ரோஷமாக வார்த்தைகளை கூற, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஓய்வை அறிவித்தார் இந்திய சுழற்பந்துவீச்சாளர் கரண் சர்மா
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் கரண் சர்மா, அனைத்து வகையான சர்வதேச மற்றும் தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரரான இவர், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத், பெங்களூரு அணிக்காக விளையாடியுள்ளார்.

4 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த கரண் சர்மா, தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். நாளை லக்னோவில் நடைபெறும் டி20 போட்டிதான் தனது கடைசி ஆட்டம் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு இந்தியா 300 ரன்கள் குவித்துள்ளது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் நிதானமாக விளையாடினாலும், தேவ்தத் படிக்கல் அதிரடியாகவும், நேர்த்தியாகவும் விளையாடி 117 ரன்கள் விளாசினார்.

கேப்டன் சுப்மன் கில் பொறுப்புடன் விளையாடி 50 ரன்கள் எடுத்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் குவித்துள்ளது. இந்த தொடரில் இந்தியா ஏற்கெனவே முதல் போட்டியில் வென்று 1-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved