Also Watch
Read this
By: Manigandan Raja

மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தகவல்
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய 163 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 151 பேர் சீனாவில் இருந்து தாயகத்திற்கு புறப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 50 ஆக அதிகரித்துள்ள நிலையில், மாயமான 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
சுரங்கப்பாதைகளுக்குள் இந்திய மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சுரங்கப்பாதையில், சிறப்பு உபகரணங்களை பயன்படுத்த முடியாததால், மிதவைகளை பயன்படுத்தி தேடி வருகின்றனர்.
ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் கைது
காசாவில் ஹமாஸ் அமைப்பின் உள்நாட்டு பாதுகாப்பு தலைவர் மொயின் அல் அராபித்தை கைது செய்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இவர், 2023 அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலின்போது பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றவர்களை மறைத்து வைக்கவும், இடமாற்றம் செய்யவும் உடந்தையாக இருந்ததாகவும், ஹமாஸ் அமைப்பை மீண்டும் பலப்படுத்த முயன்றதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved