Also Watch
Read this
By: Manigandan Raja

கோத்தகிரியில் உள்ள தூய ஆரோக்கிய அன்னையின் வருடாந்திர திருவிழா வரும் 13ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.இந்த நிலையில் விழாவின் முதல் நிகழ்வாக நேற்று ஆலய வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முதன்மை குரு கிருஸ்டோபர் லாரன்ஸ்,பங்கு தந்தை அமிர்தராஜ், உதவி பங்கு தந்தை கிளமண்ட் தலைமையில் கொடியேற்றப்பட்டது.இதனைத்தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் பந்குதந்தை அமிர்த்தராஜ், பங்குதந்தையர்கள், அருட்சகோதரிகள் உட்பட கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தூய ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் பங்குக்கு உட்பட்ட அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டனர்.இறுதியாக கொடியேற்றத்தில் கலந்து கொண்டு பங்கு மக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved