Also Watch
Read this
By: Manigandan Raja

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான மோர்தானா அணை தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ளது இந்த மோர்தானா அணை கடந்த மாதம் 24 ம் தேதி பாசன மற்றும் குடிநீர் வசதிக்காக அணை திறக்கப்பட்ட நிலையில் அணையில் இருந்து வந்த நீர் எர்த்தாங்கல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இந்த நிலையில் இன்று 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட எத்தாங்கல் ஏரி முழுவதுமாக நிரம்பி கோடி சென்றது ஏரி நிரம்பியதை எடுத்து எர்த்தாங்கல் கிராம மக்கள் ஆடு வெட்டி மலர் தூவி சிறப்பு பூஜைகள் செய்து நீரை வரவேற்றனர்.
எர்த்தாங்கல் ஏரி நிரம்பியதையடுத்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாயம் நீர் பாசனம் என்பது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved