Also Watch
Read this
By: Manigandan Raja

கூட்ட நெரிசலால் வெளியேற முடியாமல் தீயில் கருகி பலி
காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் நேரிட்ட தீவிபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். தலைநகர் கின்ஷாஷாவின் வடக்கு பகுதியில் உள்ள லிங்வாலா என்ற இடத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. குறுகிய நடைபாதைகளில் மக்கள் தீயிலிருந்து தப்பிக்க முயன்றதால் நெரிசல் ஏற்பட்டு வெளியேற முடியாமல் தீயில் கருகினர்.
ஏமனில் நடைபெற்ற மோதலில் 60-க்கும் மேற்பட்டோர் பலி
ஏமனில் பாதுகாப்புப் படையினர், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையேயான மோதலில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அரசு படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நிலவிவரும் சூழலில், ஏமனின் தைஸ் மாகாணத்தில் நேற்று மோதல் ஏற்பட்டது.

இதில், அரசு படையினர் மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் என இரு தரப்பிலும் 60 பேர் உயிரிழந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved