Also Watch
Read this
By: Manigandan Raja

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு
சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை வழக்கில், தஷ்வந்தை விடுதலை செய்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. 2017-ல் நடந்த குற்றத்திற்கு தஷ்வந்துக்கு கீழமை நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது. இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில், தமிழக அரசு கடைசி வாய்ப்பாக மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.
மாணவர் விடுதி கட்டடம் இடிந்து 7 பேர் உயிரிழப்பு
டெல்லி சத்ய நிகேதனில் மாணவர்கள் தங்கியிருந்த விடுதி கட்டடம் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழந்த சம்பவத்தில், மாநகராட்சி அதிகாரிகள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கட்டட பாதுகாப்பு விதிமீறல்கள் தொடர்பாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved