Also Watch
Read this
By: Manigandan Raja

ஓய்வெடுக்க தங்கும் விடுதிக்கு திரும்பியதாக தகவல்
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி அளித்த இரவு விருந்தில், சீன அதிபர் ஜீ ஜின்பிங் பங்கேற்கவில்லை. பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற சீன அதிபர், அதை தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதால், இரவு விருந்தை புறக்கணித்து விட்டு ஓய்வெடுப்பதற்காக தங்குமிடத்திற்கு திரும்பியதாக கூறப்படுகிறது.
பிரிக்ஸ் மாநாட்டை ஒட்டி டெல்லியில் குடிசைப் பகுதிகள் மறைப்பு
டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு நடைபெற்று வரும் நிலையில், தெற்கு டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் அமைந்துள்ள குடிசைப்பகுதிகள் வெள்ளை மற்றும் ஊதா நிற பதாகைகளால் மூடப்பட்டன.

சமூகங்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்கும் நலத்திட்டங்களில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, குடிசைப் பகுதிகளை மூடிமறைக்கும் அரசின் நடவடிக்கையால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் பண்டிகைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ((FDA)) நடத்திய அதிரடி சோதனையில் 4 கோடியே 45 லட்சம் மதிப்பிலான 75 டன் கலப்பட வெண்ணெய், பனீர் மற்றும் பால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தையொட்டி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புனே, நாசிக் மற்றும் புல்டானா பகுதிகளில் உள்ள சேமிப்பு கிடங்குகளில், இந்த சோதனைகள் நடத்தப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved