Also Watch
Read this
By: Manigandan Raja

இருதரப்பு உறவுகள், பரஸ்பர நலன்கள் குறித்து கலந்துரையாடல்
டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியா வந்துள்ள மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் இணைந்து காலை உணவு அருந்தினார். சந்திப்பின் போது தலைவர்கள் இருவரும் இந்தியா மற்றும் மலேசியா இடையேயான இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்து கலந்துரையாடினர்.
முன்னதாக, மலேசியப் பிரதமர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து இருதரப்பு வணிகம் மற்றும் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அசாமின் முன்னாள் அமைச்சர் சித்தீக் அகமது காலமானார்
புற்றுநோயுடன் போராடி வந்த அசாமின் முன்னாள் அமைச்சர் சித்தீக் அகமது காலமானார். 63 வயதான அகமது, ஸ்ரீபூமி ((Sribhumi ))மாவட்டம், பரோய்கிராமில் (( Baroigram)) உள்ள தனது இல்லத்தில் காலை 8 மணியளவில் உயிர் நீத்ததாக அவரது தனிச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு மக்களும், அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved