Also Watch
Read this
By: Manigandan Raja

உள்நாட்டு கிரிக்கெட் நடுவர்கள் மற்றும் போட்டி நடுவர்கள்
உள்நாட்டு கிரிக்கெட் நடுவர்கள் மற்றும் போட்டி நடுவர்களுக்கு ஊதியத்தை உயர்த்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. நடுவர்கள் A, B, C, D என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு தினசரி 35,000 முதல் 60,000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. மேலும், தகுதி மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் தரக்குறைப்பு முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. ஹராரேவில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 50 ஓவர்களில் 356 ரன்கள் குவித்தது. இலக்கை துரத்திய ஜிம்பாப்வே 272 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது.

பதவியில் தொடர்ந்து நீடிக்க விரும்பாத அஜித் அகர்கர்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் பதவியில் தொடர்ந்து நீடிக்க அஜித் அகர்கர் விருப்பம் தெரிவிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அவரது தற்போதைய பதவிக்காலம் அக்டோபர் 4-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அவருக்கு மாற்றாக முன்னாள் இந்திய வீரர் பார்த்திவ் படேல் மற்றும் பிரக்யான் ஓஜா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved